/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபர்
/
சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபர்
ADDED : ஆக 18, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், நேற்று காலை, 9:00 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தது. அப்போது டிக்கெட் பரிசோதகர், பரிசோதனை செய்ய வந்தார்.
ஆனால் திடீ-ரென, பஸ்சில் இருந்து இறங்கிய ஒருவர், அங்கிருந்து தப்பி ஓடி-விட்டார். சந்தேகம் அடைந்த பரிசோதகர், பஸ்சில் சோதித்த-போது, ஒரு பையில் சந்தன கட்டைகள் இருந்ததும், அதை அந்த வாலிபர் கொண்டு வந்ததும் தெரிந்தது. பின், 13 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்ப-டைத்தனர். அந்த வாலிபர், வாழப்பாடியில் ஏறியது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்-கின்றனர்.