/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அ.தி.மு.க., - பா.ம.க., கள்ளக்கூட்டணி'
/
'அ.தி.மு.க., - பா.ம.க., கள்ளக்கூட்டணி'
ADDED : செப் 05, 2024 03:02 AM
இடைப்பாடி: தி.மு.க.,வின், இடைப்பாடி நகரம் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் அதே பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. நகர செயலர் பாஷா தலைமை வகித்தார்.
அதில், சேலம் எம்.பி., செல்வகணபதி பேசியதாவது:தி.மு.க.,வின், 100 சதவீத வெற்றிக்கு காரணம் மகளிர் உரிமைத்தொகை திட்டமும், மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணமும் தான். சேலம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., - பா.ம.க., கள்ளக்கூட்டணி வைத்திருந்தார்கள். அதை மீறி, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை போல், 2026 சட்டசபை தேர்தலில் இடைப்பாடி தொகுதியிலும் வெற்றி பெறுவோம். அதை, இ.பி.எஸ்., உள்பட யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பூவாகவுண்டர், இடங்கணசாலை நகர செயலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் தலைவாசல் அருகே இலுப்பநத்தத்தில், தலைவாசல் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் அழகுவேல் தலைமை வகித்தார். அதில் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை ஆகியோர், தி.மு.க., வளர்ச்சி திட்டங்கள், வரும் சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகள் பெறுவது தொடர்பாக பேசினர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.