/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரி ஏய்ப்போரை கண்டறிய 'தெரு தணிக்கை முறை' ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு அறிவுரை
/
வரி ஏய்ப்போரை கண்டறிய 'தெரு தணிக்கை முறை' ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு அறிவுரை
வரி ஏய்ப்போரை கண்டறிய 'தெரு தணிக்கை முறை' ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு அறிவுரை
வரி ஏய்ப்போரை கண்டறிய 'தெரு தணிக்கை முறை' ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு அறிவுரை
ADDED : ஜூலை 31, 2024 10:00 PM
சேலம்:ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை செம்மைப்படுத்த, தமிழக வணிக வரித்துறை சார்பில், கடந்த, 26ல், 'தெரு தணிக்கை முறை' தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேலம் கோட்ட வணிக வரித்துறை இணை கமிஷனர் மகேஸ்வரி, சேலம், நாமக்கல் மாவட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடித விபரம்:
ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை செம்மைப்படுத்த, தமிழக வணிக வரித்துறை சார்பில், கடந்த, 26ல், 'தெரு தணிக்கை முறை' தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வணிக வரித்துறை அலுவலர்கள், ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு முகவரியை பரிசோதிப்பர்.
இந்த தணிக்கையின் போது, முறையாக பதிவு சான்று பெற்று, மாதாந்திர நமுனாக்களை தாக்கல் செய்து, வரி செலுத்தி வரும் வணிகர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பதிவு சான்று பெற்றுள்ள வணிகர்களின் வணிக இடத்துக்கு வரும் அலுவலர்கள், மிக எளிமையான அடிப்படை தகவல்களை மட்டுமே கேட்பர்.
அதை வணிக இடத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் உடனே கூறி, அலுவலர்கள் தரும் படிவம்: 1ல் கையொப்பம் இட்டால், சில நிமிடத்தில் அப்பணி முடிந்து அடுத்த வணிக இடத்துக்கு செல்வர். அதனால், வியாபாரத்தில் இடையூறு, கால விரயம் ஏற்படாது.
சங்கங்களை சேர்ந்த வணிகர்கள், தெரு தணிக்கை பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன் மூலம் போலி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் செயல்படும் வணிகர்களை அடையாளம் காண வணிகர் சங்கங்கள் உதவ வேண்டும். இதில் இடையூறு, சந்தேகம் ஏற்பட்டால், 94439 - 64040, 94423-64040 என்ற எண்களில் தகவல் தெரிவித்தால், உடனே களையப்படும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.