ADDED : பிப் 23, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,:சேலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவியரிடம் அப்பள்ளி ஓவிய ஆசிரியர் 'பேட் டச்' செய்து பேசுவதாக பெற்றோர் கொண்டலாம்பட்டி மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
நேற்று முன்தினம் பள்ளியில் போலீசார் விசாரித்ததில் சேலம் மணக்காட்டை சேர்ந்த சீனிவாசன் 58, அவரது வகுப்பின் போது தவறான எண்ணத்துடன் மாணவியரை தொட்டு பேசியது தெரிந்தது.
'போக்சோ' சட்டத்தில் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.