/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அசாம் மாநில தொழிலாளி ரயிலில் இருந்து விழுந்து பலி
/
அசாம் மாநில தொழிலாளி ரயிலில் இருந்து விழுந்து பலி
ADDED : மே 21, 2024 11:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: அசாம் மாநிலம், தமுல்பூர் அருகே பக்ரிபாரி கம்பரியை சேர்ந்தவர் கமல்சோரன், 28.
இவர், கேரள மாநிலம் கோட்டயத்தில் தன் அண்ணன் சிமோன் சோரன், 32, உடன் சேர்ந்து வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். அசாமில் நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டு போட்டு விட்டு நேற்று முன்தினம் சில்சார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கவுகாத்தியில் ஏறிய இவர், முன்பதிவில்லா பெட்டியில் பயணித்துள்ளார். நேற்று அதிகாலை, தொட்டம்பட்டியில் வந்த போது படியில் நின்றபடி பயணித்த அவர், கால் இடறி கீழே விழுந்து ரயிலில் அடிபட்டு பலியானார்.சேலம் ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

