sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆஸி., வாலிபருக்கு சூடு வைத்து சித்ரவதை போலீஸ் விசாரணையில் 'பகீர்'

/

ஆஸி., வாலிபருக்கு சூடு வைத்து சித்ரவதை போலீஸ் விசாரணையில் 'பகீர்'

ஆஸி., வாலிபருக்கு சூடு வைத்து சித்ரவதை போலீஸ் விசாரணையில் 'பகீர்'

ஆஸி., வாலிபருக்கு சூடு வைத்து சித்ரவதை போலீஸ் விசாரணையில் 'பகீர்'


ADDED : ஆக 05, 2024 02:12 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. தொழில் நிமித்தமாக சேலம் வந்தபோது, சேலம், 13வது வார்டு தி.மு.க., செயலர் மகேந்திரனிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேஷ் கடத்தப்பட்டதாக புகார் வர, அழகாபுரம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து வெட்கடேஷ் உள்பட, 3 பேரை மீட்டனர். இதுதொடர்பாக மகேந்திரன் உள்பட, 9 பேரை கைது செய்தனர்.

இதன் விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகேந்திரன் தரப்பிலான கும்பல், வெங்கடேஷ், அவரது நண்பர்கள் எபினேசர், டோனியை கடத்தி தாக்கியுள்ளனர். வெங்கடேசன் தாய் செல்வி புகார்படி, நாங்கள், 3 பேரையும் மீட்டோம். அவர்கள் காயம் அடைந்திருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். தொடர்ந்து மகேந்திரன், தினேஷ் உள்பட, 9 பேரை கைது செய்தோம். பிரபு உள்பட, 4 பேரை, தனிப்படை போலீசார் தேடுகின்றனர். இந்நிலையில் பணம் வாங்கி மோசடி செய்ததாக மகேந்திரன் புகார் அளித்தார். அதனால் கன்னங்குறிச்சி போலீசார், வெங்கடேஷ், டோனி, எபினேசர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேநேரம் மகேந்திரன் தரப்பிலான கும்பல், வெங்கடேஷ் உள்பட, 3 பேரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். சிகரெட்டால் வெங்கடேசன் தொடை, பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us