/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 11ல் கல்வி கடன் மேளா மாணவ, மாணவியருக்கு அழைப்பு
/
வரும் 11ல் கல்வி கடன் மேளா மாணவ, மாணவியருக்கு அழைப்பு
வரும் 11ல் கல்வி கடன் மேளா மாணவ, மாணவியருக்கு அழைப்பு
வரும் 11ல் கல்வி கடன் மேளா மாணவ, மாணவியருக்கு அழைப்பு
ADDED : செப் 09, 2024 07:21 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி வட்டம் பூசாரிப்பட்டியில் உள்ள ஆர்.பி., சாரதி தொழில்நுட்ப கல்லுாரியில் கல்வி கடன் மேளா வரும், 11 காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. இதில், 44 வங்கிகள், மாணவ, மாணவியர் வழங்கும் கல்வி கடன் விண்ணப்பத்தை பரிசீலித்து கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால் கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த, வெளி மாவட்டத்தில் வசித்து சேலம் மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவியர் பயன்பெறலாம். ஏற்கனவே கடன் கேட்டு விண்ணப்பித்தவர் மட்டுமின்றி புதிதாக தேவைப்படுவோரும் முகாமில் பங்கேற்கலாம். பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு டிப்ளமோ, ஐ.டி.ஐ., படிக்கவும், பிளஸ் 2 முடித்தவர் பட்டப்படிப்பு படிக்கவும், கல்லுாரியில் முதலாண்டு தொடங்கி, 4ம் ஆண்டு வரை படித்து கொண்டிருப்பவர், முதுகலை கல்வி படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடன் பெற விரும்புவோர், கல்லுாரி அடையாள அட்டை, முதல் பட்டதாரி, 10, பிளஸ் 2 மதிப்பெண், வருமான வரி, ஜாதிச்சான்றிதழ், ரேஷன், ஆதார், பான் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், வித்யாலஷ்மி ஜன்மார்த் இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் அதன் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
மகுடஞ்சாவடி, மேச்சேரி, ஓமலுார், பனைமரத்துப்பட்டி, தாரமங்கலம், ஏற்காடு ஆகிய இடங்களிலும், கல்வி கடன் மேளா தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. அதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும். இத்தகவலை சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.