sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கர்ப்பிணி சாவில் சந்தேகம் கணவர், 2 பேர் மீது வழக்கு

/

கர்ப்பிணி சாவில் சந்தேகம் கணவர், 2 பேர் மீது வழக்கு

கர்ப்பிணி சாவில் சந்தேகம் கணவர், 2 பேர் மீது வழக்கு

கர்ப்பிணி சாவில் சந்தேகம் கணவர், 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 10, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சின்னபுனல்வாசலைச் சேர்ந்த, அழகுவேல் மகன் பிரதீஷ்குமார், 30. இவர் பெங்களூருவில் கணினி இன்ஜினியராக பணிபுரிகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த வேலு மகள் கவியரசி, 24. இவரை, கடந்த ஜனவரியில் பிரதீஷ்குமார் திருமணம் செய்து கொண்டார்.

கவியரசி, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கணவருடன் தகராறு ஏற்பட்டது. கடந்த, 8ல் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், கவியரசி வீட்டில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். கவியரசியின் பெற்றோர், மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

கெங்கவல்லி போலீசார் சமாதானப்படுத்திய பின், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடலை பெற்றுக்கொண்டனர். அவர்கள் புகார்படி, போலீசார் விசாரித்து, பிரதீஷ்குமார், அவரது தாய் தங்கமணி, அவரது தங்கை பிரதீபா மீது சந்தேக மரண வழக்கு பதிந்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us