sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆத்துக்காடு பாலம் கட்டும் பணியை 4 மாதத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு

/

ஆத்துக்காடு பாலம் கட்டும் பணியை 4 மாதத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு

ஆத்துக்காடு பாலம் கட்டும் பணியை 4 மாதத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு

ஆத்துக்காடு பாலம் கட்டும் பணியை 4 மாதத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு


ADDED : ஜூலை 03, 2024 11:13 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 11:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: வீரபாண்டி வட்டாரத்தில் ஊரக வளர்ச்சி முகமையில், 6.82 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். அதன்படி உத்தமசோழபுரம் ஊராட்சி ஆத்துக்காட்டில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தில், 5.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பால பணியை பார்வையிட்டார். அப்போது பணியாட்கள் இல்லாததோடு, துாண்கள் மட்டும் அரைகுறையாக கட்டப்பட்டிருந்தன.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சேகரிடம் கடிந்து கொண்ட கலெக்டர், எப்போது பணி தொடங்கியது, எப்போது முடிப்பீர்கள், பணியாட்கள் எங்கே, ஒப்பந்ததாரர் யார் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். துாண்களில் இணைக்கப்பட்டுள்ள கம்பிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்த அவர், 4 மாதங்களுக்குள் கட்டுமான பணியை முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, வீரபாண்டி, அக்கரபாளையம், எட்டிமாணிக்கம்பட்டி, முருங்கப்பட்டி, மூடுதுறை ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி, வீரபாண்டி ஒன்றிய கமிஷனர் சந்திரமலர், பி.டி.ஓ., தனபால் (கி.ஊ.,) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us