/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கபடியில் அசத்திய மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
/
கபடியில் அசத்திய மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஆக 09, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவி காருண்யா, 17. இவர் கடந்த ஜனவரியில் ராஜஸ்தானில், மாநில அளவில் நடந்த, 17 வயதுக்கு உட்-பட்டோர் பெண்கள் கபடியில் தமிழக அணி சார்பில் விளையாடி தங்கம் வென்றார். அவரை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று பள்ளி
யில் பாராட்டி, பரிசு, சான்றிதழ் வழங்கினார். அதேபோல் அயோத்தியாப்பட்டணம் அட்மா குழு தலைவர் விஜயகுமார், மாணவியை பாராட்டி பரிசு தொகை வழங்கினார். தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் தங்கராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்-றனர்.