sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சென்றாயபெருமாள் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

/

சென்றாயபெருமாள் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

சென்றாயபெருமாள் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

சென்றாயபெருமாள் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : மே 28, 2024 07:26 AM

Google News

ADDED : மே 28, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: ராக்கிப்பட்டி, சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் காகாபாளையம் அருகே, ராக்கிப்பட்டி செங்கோடம்பாளையத்தில் பழமையான சென்றாய பெருமாள் மலைக்கோவில் உள்ளது. இதை புதுப்பித்து நாளை (மே 29) கும்பாபி ேஷகம் நடத்தப்படவுள்ளது. முகூர்த்த கம்பம் கடந்த, 19ல் நடப்பட்டது. நேற்று காலை 4:30 மணிக்கு சேனை முதலியார், மகா சுதர்சன யாகத்துடன் விழா முறைப்படி துவங்கியது.

காலை, 7:00 மணிக்கு அருகிலுள்ள ராமர் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளம் வாண வேடிக்கைகளுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் புனிதநீர் நிரம்பிய கலசங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபி ேஷகம் நாளை காலை, 6:15க்கு மேல், 7:15 மணிக்குள் கோபுர கலசத்துக்கும், மூலவர் சென்றாய பெருமாளுக்கும் யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடத்தப்படும்.






      Dinamalar
      Follow us