/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலம் பறி போனதால் தர்ணா கலெக்டரிடம் புகார் மனு
/
நிலம் பறி போனதால் தர்ணா கலெக்டரிடம் புகார் மனு
ADDED : செப் 03, 2024 03:07 AM
சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்-டியை சேர்ந்தவர் இந்திராணி, 52. இவர், தன் இரு மகன், மரு-மகள்கள் உள்ளிட்ட எட்டு பேருடன், நிலம் ஆக்கிரமிப்பு குறித்து மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்-போது, வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, தர்ணாவை கைவிட்டு மனு கொடுத்தனர். அதன்பின், இந்திராணியின் இளைய மகன் நவீன்குமார், 29, கூறியதாவது:தாய் பெயரில் உள்ள, 11 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியை, பக்-கத்து நிலத்தை சேர்ந்தவர் ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளார். ஆக்கிரமிப்பை அகற்ற, நில அளவீடு நடந்தது. அப்போது முட்-டுக்கல் போடவிடாமல் பக்கத்து நிலத்துக்காரர் தடுத்து விட்டார். புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து ரசீது வழங்-கினர். இந்த விவகாரத்தில், மேல் நடவடிக்கை எடுக்கப்பட-வில்லை. எனவே, எங்களுக்கான நியாயம் கேட்டு வந்தோம்.
இவ்வாறு கூறினார்.