/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உறுப்பினருக்கு பதிவு தபால் வழங்கல் இன்று பைத்துார் ஊராட்சி கூட்டம்
/
உறுப்பினருக்கு பதிவு தபால் வழங்கல் இன்று பைத்துார் ஊராட்சி கூட்டம்
உறுப்பினருக்கு பதிவு தபால் வழங்கல் இன்று பைத்துார் ஊராட்சி கூட்டம்
உறுப்பினருக்கு பதிவு தபால் வழங்கல் இன்று பைத்துார் ஊராட்சி கூட்டம்
ADDED : ஆக 09, 2024 02:29 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சி தலைவியாக இருந்தவர் கலைச்செல்வி, 50. தி.மு.க.,வை சேர்ந்த இவர், தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. உயர்-நீதிமன்ற உத்தரவுக்கு பின், கடந்த ஜூலை, 29ல், கலைச்செல்வி பதவி நீக்கப்பட்டார். துணைத்தலைவர் சந்திரசேகரிடம், தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தில் தலைவர், துணைத்தலைவர் கையெழுத்திட வேண்டும். தற்-போது துணைத்தலைவர், தலைவராக பொறுப்பு வகிப்பதால் மற்-றொருவரை உப தலைவராக தேர்வு செய்ய வேண்டும். இதற்-கான கூட்டம், 6ல் நடத்துவது தொடர்பாக, சந்திரசேகர், 11 வார்டு உறுப்பினர்களுக்கு தபால் அனுப்பினார். அதில் தினகரன், சரோஜா, பதிவு தபாலை வாங்கவில்லை. இதனால் அந்த கூட்டம்
ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் தாசில்தார் பாலாஜி உத்-தரவுப்படி, வி.ஏ.ஓ.,க்கள், இரண்டு வார்டு உறுப்பினர்களுக்கும், வீட்டில் சென்று தபாலை வழங்கினர். இதனால் இன்று ஊராட்சி கூட்டம் நடக்கிறது என, ஆத்துார் பி.டி.ஓ., செந்தில் கூறினார்.