sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

/

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'


ADDED : ஜூலை 26, 2024 12:41 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி:சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில், 30க்கும் மேற்பட்ட ஏரி, குட்டைகளில், உரிய விதிகளை பின்பற்றி வண்டல் மண் அள்ள, விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், மகுடஞ்சாவடி ஊராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், ஏரி, குட்டைகளில் விதிமீறி மண் அள்ளி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பா.ம.க.,வை சேர்ந்த மகுடஞ்சாவடி ஊராட்சி தலைவி மேகலா கூறியதாவது:

ஊராட்சிக்குட்பட்ட சொரியாம்பட்டி ஏரியில், தி.மு.க.,வினர், வண்டல் மண்ணை அள்ளி, விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் டிப்பர் லாரிகளில் கடத்தி, லோடு, 8,000 -- 10,000 ரூபாய் வரை, உள்ளூர், வெளியூரில் பல்வேறு பயன்பாட்டுக்கு விற்கின்றனர்.

இதை அறிந்து, மக்கள் உதவியுடன் ஏரிக்கு சென்றபோது, டிப்பர் லாரிகளை அவசரமாக எடுத்துச்சென்றனர். மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தோம். அவர் ஆய்வு செய்துள்ளார். இனி சேலம் கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்தகவலை வீடியோவாக பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us