/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டாஸ்மாக் கடையை அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் கடையை அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 03, 2024 03:01 AM
சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்-தப்பட்டது.
சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகில், தனியார் மருத்துவமனை எதிரில் உள்ள டாஸ்மாக் கடை முன், நேற்று இந்-திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்து பேசியதா-வது:டாஸ்மாக் கடைக்கு வருவோர், வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்-துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ், பள்ளி, கல்லுாரி பஸ்கள் நெரிசலில் சிக்கி, கடும் அவதிக்குள்ளாகின்றன. இதனால், டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
கொண்டலாம்பட்டி மண்டல செயலாளர் கந்தன், பனமரத்துப்-பட்டி ஒன்றிய செயலாளர் பாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.