/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாய் கடித்து மூதாட்டி பலி பாதுகாப்புடன் உடல் தகனம்
/
நாய் கடித்து மூதாட்டி பலி பாதுகாப்புடன் உடல் தகனம்
நாய் கடித்து மூதாட்டி பலி பாதுகாப்புடன் உடல் தகனம்
நாய் கடித்து மூதாட்டி பலி பாதுகாப்புடன் உடல் தகனம்
ADDED : செப் 01, 2024 03:26 AM
சேலம்: சேலம், கோரிமேட்டை சேர்ந்தவர் மாரியம்மாள், 80. கணவர் இறந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன் பெங்களூரு சென்ற மாரியம்மாள், அங்கு சாலையோரம் தங்கி, சவுரி முடி விற்று வந்தார். அப்போது அவரை தெருநாய் கடித்துள்ளது. ரத்தக்க-சிவை தடுக்க துணியால் கட்டுப்போட்டு அலட்சியமாக இருந்தார்.
நாயின் விஷம் பரவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இரு நாட்க-ளுக்கு முன், பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு சென்று நாய் கடித்த விபரத்தை தெரிவிக்க, மருத்துவர்கள் ஆதார் அட்டை கேட்டனர். அவர் இல்லை என கூற, சொந்த ஊரில் சிகிச்சை பெற அறிவுறுத்தி அனுப்பினர். சேலம் வந்த அவர், அரசு மருத்து-வமனையில் கடந்த, 30ல் அனுமதிக்கப்பட்டார். வாயிலிருந்து அதிக அளவில் நுரையுடன் கூடிய உமிழ்நீர் வெளியேறி மூச்சுத்தி-ணறல் ஏற்பட்டதால், நேற்று மதியம் இறந்தார். அவரது சடலம், பிளிச்சிங் பவுடர் சகிதமாக பலத்த பாதுகாப்புடன் ஒப்படைக்க, அவரது மகன்கள் சூர்யா, 39, சதீஷ், 37, பெற்றுச்சென்று, தகனம் செய்தனர்.