sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சில ரயில்களின் இயக்கம் நீட்டிப்பு

/

சில ரயில்களின் இயக்கம் நீட்டிப்பு

சில ரயில்களின் இயக்கம் நீட்டிப்பு

சில ரயில்களின் இயக்கம் நீட்டிப்பு


ADDED : மே 17, 2024 12:54 AM

Google News

ADDED : மே 17, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் வழியே செல்லும் சில வார எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:

கோடை விடுமுறையில் பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்க, வார சிறப்பு ரயில்களின் இயக்கம் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி வெள்ளி கிழமை இயக்கப்படும் கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் ஜூன், 28 வரை நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் திங்கள் கிழமை இயக்கப்படும் ரயில் ஜூலை, 1 வரை நீட்டிக்கப்படுகிறது.

வெள்ளி கிழமை இயக்கப்படும் கொச்சுவேலி - ஷாலிமார் ரயில் ஜூன், 28 வரை நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் திங்கள் கிழமை புறப்படும் ரயில் ஜூலை, 1 வரை நீட்டிக்கப்படுகிறது. செவ்வாய் கிழமை இயக்கப்படும் கொச்சுவேலி - பெங்களூரு ரயில் ஜூலை, 2 வரையும், அதன் மறுமார்க்கத்தில் புதன் கிழமை இயக்கப்படும் ரயில் ஜூலை, 3 வரையும் நீட்டிக்கப்படுகிறது. வியாழக்கிழமை இயக்கப்படும் கோவை - பகத் கி கோத்தி ரயில் ஜூலை, 27 வரையும், மறுமார்க்கத்தில் ஞாயிற்று கிழமை இயக்கப்படும் ரயில் ஜூன், 30 வரையும் நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயணியர் அவதி

கோவை - லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமாக கோவையில் காலை, 8:50க்கு புறப்படும். ஆனால், மறுமார்க்க ரயில் தாமதத்தால், கடந்த, 2ல், மதியம், 12:30க்கு புறப்பட்டது. அதேபோல், 11, நேற்று முன்தினமும், மதியம், 12:00 மணிக்கு புறப்பட்டது. நேற்று மதியம், 1:15க்கு புறப்பட்டது. தொடர்ந்து இந்த ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், முன்பதிவு செய்திருந்த பயணியர், முன்பதிவு செய்யாமல் பொது பெட்டியில் பயணிக்க திட்டமிட்டு இருந்தவர்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி ஸ்டேஷன்களில் காத்திருந்து அவதிக்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us