ADDED : ஆக 08, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடியில், காகா
பாளையம் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலை, கண்டர்குலமாணிக்கம், அருந்ததியர் காலனியில் இருந்து வேப்பமரத்தான்காடு, கோணங்கிபாளையம் வழியே, 2 கி.மீ.,க்கு, 2004ல் தார்சாலை அமைக்கப்பட்டது. அதை சரியாக பராமரிக்காததால், 10 ஆண்டுகளாக ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் அதிகாலையில் காளிப்பட்டிக்கு விளைபொருட்களை விற்க, இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள், அடிக்கடி தடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாவதால், மீண்டும் சாலை அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.