/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனியன் கழிவு குடோனில் தீ ரூ.2 கோடி மதிப்பில் சேதம்
/
பனியன் கழிவு குடோனில் தீ ரூ.2 கோடி மதிப்பில் சேதம்
பனியன் கழிவு குடோனில் தீ ரூ.2 கோடி மதிப்பில் சேதம்
பனியன் கழிவு குடோனில் தீ ரூ.2 கோடி மதிப்பில் சேதம்
ADDED : ஆக 05, 2024 06:56 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, பனியன் கழிவு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
நாமக்கல் மாவட்டம்
பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 42; கணபதிபா-ளையம் பகுதியில் குடோன் அமைத்து, கழிவு பனியன் துணி-களை சேகரித்து, மறு சுழற்சி செய்து நுால் தயாரிக்கும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில் குடோனில் தீப்பிடித்தது. குடோன் முழுதும் பழைய பனியன் கழிவு வைக்கப்பட்டிருந்ததால், வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோன் முழுதும் பர-வியதால், 5 மணி நேரம் போராடி வெளியே எரிந்த தீயை கட்-டுக்குள் கொண்டு வந்தனர். பின், பொக்லைன் இயந்திரம் மூலம் குடோனின் ஒரு பகுதி சுவரை இடித்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்றனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்-பட்டு, 14 மணி நேர போராட்டத்திற்கு பின், நேற்று மாலை, 5:00 மணிக்கு தீயை முற்றிலும் அணைத்தனர். குடோனில் வைக்-கப்பட்டிருந்த பனியன் கழிவு முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மேற்கூரை சரிந்தது. இதனால் சேத மதிப்பு, இரண்டு கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது. வருவாய் துறை அதிகாரிகள், பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.