ADDED : ஜூன் 04, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த, பேளூர் வாரச்சந்தையில், 11 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
வாழப்பாடி அடுத்த பேளூர் வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை நடந்தது. சேலம், வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி பகுதியை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு துவங்கிய வார சந்தைக்கு, 900 ஆடுகள் வரை விற்பனைக்கு வந்தது.
10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 4,000 முதல், 5,000 ரூபாய் வரை விலை போனது. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு, 3,000 முதல் 4,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற வார சந்தையில் மொத்தம், 11 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. தொடர்மழை காரணமாக ஆடுகள் வரத்து குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.