sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'ஸ்கேன்' மையத்தில் பாலினம் கூறிய அரசு டாக்டர், 8 நர்சுகள் 'சஸ்பெண்ட்'

/

'ஸ்கேன்' மையத்தில் பாலினம் கூறிய அரசு டாக்டர், 8 நர்சுகள் 'சஸ்பெண்ட்'

'ஸ்கேன்' மையத்தில் பாலினம் கூறிய அரசு டாக்டர், 8 நர்சுகள் 'சஸ்பெண்ட்'

'ஸ்கேன்' மையத்தில் பாலினம் கூறிய அரசு டாக்டர், 8 நர்சுகள் 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 01, 2025 02:53 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: 'ஸ்கேன்' மையம் நடத்தி, கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறிய விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், 8 செவிலியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

சேலம், வீராணத்தில் உள்ள 'பசுபதி ஸ்கேன்' மையத்தில், கருவில் உள்ள குழந்தை பாலினத்தைக் கண்டறிந்து கூறுவதாக, சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது.

குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இடைத்தரகர்கள் வாயிலாக ஏராளமானோர், இங்கு வந்து பரிசோதித்து செல்வது தெரிந்தது.

இதனால் கடந்த, 25ல், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

அந்த மையத்தை, ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக செவிலியர் கலைமணி நடத்தியதும் தெரிந்தது.

இவர்கள் பாலினத்தைக் கண்டறிந்து கூற, கர்ப்பிணியரிடம், 15,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தது தெரிந்தது.

இதனால் மையத்துக்கு, 'சீல்' வைத்த அதிகாரிகள், அங்கிருந்த கருவிகள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வீராணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

முத்தமிழ், கலைமணி மட்டுமின்றி அவர்களுக்கு உடந்தையாக இருந்த கிராம சுகாதார செவிலியர் அம்பிகா ஆகியோர் இரு நாட்களுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மேலும், கலைமணியை, 'டிஸ்மிஸ்' செய்ய, உயர் அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த மையத்துக்கு உடந்தையாக செயல்பட்ட, சேலம் மற்றும் ஆத்துாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களாக பணிபுரிந்த வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைச்செல்வி, மகேஸ்வரி ஆகியோரையும், நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us