/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரியை பதிவாளராக நியமிக்க வலியுறுத்தல்
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரியை பதிவாளராக நியமிக்க வலியுறுத்தல்
ஐ.ஏ.எஸ்., அதிகாரியை பதிவாளராக நியமிக்க வலியுறுத்தல்
ஐ.ஏ.எஸ்., அதிகாரியை பதிவாளராக நியமிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 01:14 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த, 7 ஆண்டுகளாக நிரப்பப்படாத பதிவாளர், தேர்வா-ணையர் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும். உறுப்பு கல்லுாரி முதல்வர்களை, பல்கலையில் இருந்து விடுவிக்க வேண்டும். வர-லாறு, கல்வியியல், இயற்பியல் துறை தலைவர்களை, அந்தந்த துறை ஆசிரியர்களால் நியமிக்க வேண்டும். ஆட்சிக்குழு தீர்மா-னத்தை, பல்கலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். தமி-ழக அரசு, நிரந்தர பதிவாளரை நியமிக்கும் வரை, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மற்றும் பல்-கலை வக்கீல்களை மாற்றி, புது அரசு சார்பில் வக்கீல்களை நிய-மிக்க வேண்டும். ஆசிரியர்களின் பணி மேம்பாடு, பதவி உயர்வு தொடர்பாக நேர்காணல் நடத்தி, ஓராண்டாக முடிவு அறிவிக்கா-ததால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வாணையர் பொறுப்பில், 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரே உள்ளதால் உடனே மாற்றி அனுபவமிக்க ஆசிரியரை அப்பொறுப்புக்கு நிய-மிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.