/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர்சந்தைக்கு 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
/
உழவர்சந்தைக்கு 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
உழவர்சந்தைக்கு 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
உழவர்சந்தைக்கு 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஏப் 21, 2024 01:40 AM
சேலம்,:சேலம்
உழவர்சந்தைக்கு தேவையான தக்காளியை, 'இ - நாம்' திட்டத்தில்
கொள்முதல் செய்து வழங்க, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம்
மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில் நேற்று முன்தினம் தக்காளி
விற்பனை, 24.04 டன்னாக இருந்தது, நேற்று, 29.14 டன்னாக
அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சம் சேலம், சூரமங்கலம் சந்தையில், 7
டன்; தாதகாப்பட்டி சந்தையில், 4.4 டன், அஸ்தம்பட்டி சந்தையில், 2.2
டன் தக்காளி விற்பனை நடந்துள்ளது. அம்மாபேட்டை, மேட்டூர்,
தம்மம்பட்டி உழவர் சந்தைகளில் கிலோ தக்காளி தலா, 20 ரூபாய்,
மேச்சேரி சந்தையில், 22 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் வாழப்பாடி,
சூரமங்கலம் உள்ளிட்ட, 9 உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ, 24
ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே வெளிச்சந்தையில், 20 ரூபாய்க்கு
கிடைக்கிறது.
இதுகுறித்து உழவர்சந்தை விவசாயிகள் கூறியதாவது: சேலம்
மாவட்ட உழவர்சந்தைகளுக்கு பெரும்பாலும் தர்மபுரி, ஓசூர் பகுதி
தக்காளி வரத்து தான் உள்ளது. வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி, அதை
உழவர்சந்தைக்கு கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். இதையே, 'இ-நாம்'
திட்டத்தில் தர்மபுரி உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள்,
நேரடியாக சேலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகளுக்கு
விற்று அவை உழவர்சந்தைகளில் விற்கும்போது கிலோவுக்கு, 2 - 3
ரூபாய் வரை விலை குறையும். ஆனால் வியாபாரிகள் அதிக லாபம் பார்க்க,
கூடுதல் விலை வைத்து விற்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் விவசாயிகள், நுகர்வோர் ஒருசேர பயன்பெறும்படி, 'இ - நாம்'
திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

