/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 26,000 கன அடியாக அதிகரிப்பு நடப்பாண்டில் 3ம் முறை 16 கண் மதகில் உபரிநீர் திறப்பு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 26,000 கன அடியாக அதிகரிப்பு நடப்பாண்டில் 3ம் முறை 16 கண் மதகில் உபரிநீர் திறப்பு
மேட்டூர் அணை நீர்வரத்து 26,000 கன அடியாக அதிகரிப்பு நடப்பாண்டில் 3ம் முறை 16 கண் மதகில் உபரிநீர் திறப்பு
மேட்டூர் அணை நீர்வரத்து 26,000 கன அடியாக அதிகரிப்பு நடப்பாண்டில் 3ம் முறை 16 கண் மதகில் உபரிநீர் திறப்பு
ADDED : ஆக 18, 2024 04:23 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 26,000 கன அடியாக உயர்ந்த நிலையில், நடப்பாண்டில், 3ம் முறை, 16 கண் மதகில் உபரிநீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளின் நீர் திறப்பு குறைந்ததால், கடந்த, 14ல் வினாடிக்கு, 26,864 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, 15ல், 16,500 கனஅடியாக சரிந்தது. ஆனால் நேற்று காலை, வினா-டிக்கு, 22,000 கனஅடியாகவும், மாலை, 26,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இதில், 21,500 கனஅடி நீர், மின் நிலையங்கள் வழியே பாசனத்துக்கும், 500 கனஅடி நீர் கால்வாயிலும், மீதி, 4,000 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்-பட்டது. இதனால் நடப்பாண்டில், 3ம் முறை, 16 கண் மதகில் உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரைக்கு செல்லவும், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை நீர்மட்டம் நேற்று, 120 அடி, நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்மட்டம் கடந்த, 30ல், 120 அடியாக உயர்ந்த நிலையில், 9, 10, 11ல், 119 அடி-யாக சரிந்தது. மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க, நேற்றுடன், 17 நாட்-களாக மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடியாக இருந்தது.

