ADDED : ஜூலை 18, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று காலை வரை பனியை போல மழை துாறியதால் ஊட்டி, கொடைக்-கானல் போன்று காட்சியளித்தது. மேட்டூரில் கடந்த மே, 6 முதல் அவ்வப்போது கோடை மழை துவங்கி, தற்போது தென்மேற்கு பருவமழை பெய்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை, 4.6 மி.மீ., மழை பனியை போல துாறியது.
மேலும், மேகமூட்டங்கள் சிறிய பச்சை, பசேல் என காணப்-பட்ட மலைகுன்றுகளில் இறங்கி ரம்மியமாக காட்சியளித்தது மேட்டூர் பகுதி பொதுமக்களை ரசிக்க வைத்தது. பல மாதங்க-ளுக்கு பின்பு நேற்று ஊட்டி, கொடைக்கானல் போல வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டங்கள் சூழ காட்சியளித்தது.