/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூரை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., அறிக்கை
/
மேட்டூரை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., அறிக்கை
மேட்டூரை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., அறிக்கை
மேட்டூரை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., அறிக்கை
ADDED : ஆக 09, 2024 02:20 AM
மேட்டூர்: பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் பிறந்த-நாளை முன்னிட்டு, அவரது அறிக்கை: மேட்டூர் சட்டசபை தொகுதியில் உள்ள பொதுப்பணித்துறை நிலத்தில், 50 ஆண்டுக-ளுக்கு மேலாக வசிக்கும், 50,000 பேருக்கு பட்டா வழங்க நடவ-டிக்கை எடுப்பேன். மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல் புகையை கட்டுப்படுத்தவும், தொகுதியில் உள்ள அரசு, தனியார் ஆலைகளில், 2 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுப்பேன்.
மேட்டூர் நகராட்சியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், சிறப்பு சாலைகள் திட்டத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கவும், அனைத்து வீதிகளிலும், எல்.இ.டி., விளக்குகள், 2 கோடி ரூபாய் செலவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொளத்துார் ஒன்றியம் பாலமலைக்கு தார்ச்சாலை அமைத்தல், ஜே.ஜே.எம்., திட்டத்தில், 80 கோடி ரூபாய் செலவில் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் இணைப்பு, கொளத் துார், மேச்சேரி ஒன்றி-யத்தில் முதல்வர் கிராம சாலை திட்டத்தில், 25 கோடி ரூபாயில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்-டத்தை பிரித்து மேட்டூரை தலைமையிடமாக வைத்து புது மாவட்டம், மேச்சேரியை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.