sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கலெக்டர் முன் அமர்ந்து தாய், மகன் திடீர் தர்ணா

/

கலெக்டர் முன் அமர்ந்து தாய், மகன் திடீர் தர்ணா

கலெக்டர் முன் அமர்ந்து தாய், மகன் திடீர் தர்ணா

கலெக்டர் முன் அமர்ந்து தாய், மகன் திடீர் தர்ணா


ADDED : ஆக 06, 2024 02:12 AM

Google News

ADDED : ஆக 06, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த ஓலப்பட்டி காட்டுவளவை சேர்ந்த மூதாட்டி பாப்பா, 75. இவரது மகன் சசிக்குமார், 40. இருவரும் காலி குடங்களுடன் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது, எதிரே வந்த கலெக்டருக்கு முன்பாக, அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு உண்டானது. அவர்களிடம் விசாரித்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுப்பதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தாய் -மகனை சமாதானப்படுத்தினர்.அப்போது சசிக்குமார் கூறுகையில்,'' அரசு மானியம் பெற்று, இரு ஆண்டுக்கு முன், சொந்தமாக போர்வெல் போட்டேன். அதற்கு இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளேன். குடிநீருக்காக, 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டி உள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் கண்டுகொள்ளவில்லை,'' என்றார்.

சசிக்குமார் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு அவரை, சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. அவரை, சிகிச்சைக்கு அனுமதிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தாய் பாப்பா, மனு கொடுத்துவிட்டு, வீட்டுக்கு சென்றார்.






      Dinamalar
      Follow us