sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுவரில் கொட்டும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

/

சுவரில் கொட்டும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சுவரில் கொட்டும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சுவரில் கொட்டும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்


ADDED : ஆக 26, 2024 02:57 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அருகே

பழைய சூரமங்கலம் செல்லும் வழியில் சுரங்கப்பாலம் உள்ளது. அதன் தரையில் இரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் வீணாக வழிந்து கொண்டிருக்கிறது.

இதனால் தரையில் அரிப்புகளால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்-பட்டு தண்ணீர் தேங்கி பாசி படர்ந்துள்ளன. இதை சரி செய்யாத நிலையில், 10 நாட்களாக சுரங்கப்பால சுவரில் இருந்து இரு துளைகள் வழியே, குடிநீர் குழாயில் இருந்து விழுவதை போன்று தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது.

பகலிலேயே இருள் சூழ்ந்த பகுதியாக உள்ள பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் மீது தண்ணீர் கொட்டுகிறது. இதை தவிர்க்க பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலை நடுப்பகுதியில் செல்கின்-றனர்.

அப்போது ஒரே நேரத்தில் எதிர் எதிரே வாகனங்கள் வரும் போதும், கொட்டும் தண்ணீரில் இருந்து தப்பிக்க முயலும்-போதும், பாசியில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதனால் பாலத்தின் தரை, சுவர்களில் இருந்து கொட்டும் தண்-ணீரை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்

வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us