/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
/
புது ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : செப் 14, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம், செப். 14-
பெத்தநாயக்கன்பாளையம், மேல்நாடு ஊராட்சி பெரண்டூரில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு பகுதி நேர ரேஷன் கடை கட்டித்தர, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், பகுதி நேர ரேஷன் கடை கட்ட, 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பணி முடிந்த நிலையில் நேற்று, ரேஷன் கடையை, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் திறந்து வைத்து, ரேஷன் பொருட்களை வழங்கினார்.

