ADDED : மே 01, 2024 01:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே நரசிங்கபுரம் நகரம்; கெங்கவல்லி பேரூர் அ.தி.மு.க., சார்பில் நேற்று, நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
அதை, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் திறந்து வைத்தார். அப்போது மக்களுக்கு, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழங்கள், மோர் வழங்கப்பட்டன. இதில் எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.