/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டியை தள்ளிவிட்டு 8 பவுன் தாலிக்கொடி பறிப்பு
/
மூதாட்டியை தள்ளிவிட்டு 8 பவுன் தாலிக்கொடி பறிப்பு
ADDED : செப் 09, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடையாம்பட்டி:: காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் கீழ் காலனியை சேர்ந்த நல்லகவுண்டர் மனைவி சின்னதாயி, 50. இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்துள்ளார். நேற்று மாலை, 5:30 மணிக்கு, கடைக்கு செல்வதற்கு சின்னதாயி வீடு முன் நின்றிருந்தார்.
அப்போது ஒருவர் பின்புறம் வந்து, சின்னதாயியை தள்ளிவிட்டார். தொடர்ந்து அவர் அணிந்திருந்த, 8 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். இதுகுறித்து அவர் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.