ADDED : மே 13, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி, புங்கனேரியில் ஒருவர், முட்புதர் இடையே துாக்கு கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பதாக, கொங்கணாபுரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், இரவில் சடலத்தை மீட்க முடியாமல் தவித்தனர். நேற்று காலை, அழுகிய நிலையில் சடலத்தை மீட்டனர். 40 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்தது. அவர் யார், கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.