sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கவுன்சிலரை தாக்கிய நிருபர் கைது

/

கவுன்சிலரை தாக்கிய நிருபர் கைது

கவுன்சிலரை தாக்கிய நிருபர் கைது

கவுன்சிலரை தாக்கிய நிருபர் கைது


ADDED : ஜூன் 16, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து, தேங்கல்வாரையை சேர்ந்தவர் கண்ணன். வி.சி., நிர்வாகி இவரது மனைவி சித்திக் சோபியா, 47. அருகே உள்ள மயான தெருவை சேர்ந்த, மாத பத்திரிகை நிருபர் மாதேஷ், 51.

சித்திக் சோபியா, மாதேஷ் இடையே, பாதை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கண்ணன் மாட்டிறைச்சி கடை நடத்துகிறார். அதுகுறித்து பத்திரிகையில் போடாமல் இருக்க, மாதேஷ், அவர் நடத்தும் அறக்கட்டளைக்கு மாதம், 5,000 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது. கடந்த மாதம் கண்ணன் பணம் கொடுக்காததால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த, 12 இரவு, 9:30 மணிக்கு சோபியா வீட்டுக்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த குமார், குடிநீரை குழாய் போட்டு, மாதேஷ் வீட்டில் பிடிப்பதாக கூறியுள்ளார். அதை சுட்டிக்காட்டி கேட்ட கவுன்சிலர் சோபியாவை, மாதேஷ், அவரது மகன்கள் தமிழரசன், தமிழ்ராஜ் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அஜித்குமார், சம்பத் கேட்க, அவர்களையும் மாதேஷ் தாக்கியுள்ளார். காயம் அடைந்த சோபியா அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் நேற்று மாதேைஷ கைது செய்து அவரது மகன்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us