sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆற்றில் குவிந்த குப்பையால் மூழ்கிய விநாயகர் சிலை மீட்பு

/

ஆற்றில் குவிந்த குப்பையால் மூழ்கிய விநாயகர் சிலை மீட்பு

ஆற்றில் குவிந்த குப்பையால் மூழ்கிய விநாயகர் சிலை மீட்பு

ஆற்றில் குவிந்த குப்பையால் மூழ்கிய விநாயகர் சிலை மீட்பு


ADDED : ஆக 27, 2024 04:22 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம் அருகே உத்தமசோழபுரம், திருமணிமுத்தாற்றின் கரையில், பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் உள்ளது. இதன் எதிரே ஆற்றுக்குள் பெரிய பாறையில் புடைப்பு சிற்பமாக விநாயகர் சிலை வடித்து, அதன் மீது நான்கு கால் கல் மண்டபம் எழுப்பி, 50 ஆண்டுகளுக்கு முன் வரை பக்தர்கள் வழிபட்டனர்.

ஆற்றில் கழிவுநீர் அதிகளவில் வர துவங்கியதால், பூலாவரி பிரிவில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததாலும், ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளாலும், பாலத்தின் நடுவே இருந்த நான்கு கால் மண்டபத்துடன் கூடிய விநாயகர் சிலை புதைந்தது.

குப்பைக்கு வைத்த தீயின் வெப்பத்தை தாங்காமல், சில மாதங்களுக்கு முன் கல் மண்டபமும் உடைந்து விழுந்தது. அதன் மீதும் குப்பை கொட்டி, 15 அடி வரை கழிவு நிறைந்திருந்தன.

இந்நிலையில் அப்பகுதி பக்தர்கள் ஒன்றிணைந்து, ஆற்றுக்குள் கொட்டப்பட்ட குப்பையை, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றினர். சிதிலமடைந்த கல் மண்டப துாண்களை அப்புறப்படுத்தி, விநாயகர் புடைப்பு சிற்பத்தை மீட்டுள்ளனர். அதற்கு அபிஷேகம் செய்து, வழிபாட்டுக்கும் கொண்டு வந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us