/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்
/
மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 28, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,
சேலம், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வன பாதுகாப்பு படையினர், தேக்கம்பட்டி அருகே செங்கரட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது மான் கறி விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த சண்முகம் 38, மணி, 55, சரவணகுமார், 23, ஆகியோரை பிடித்த, 5 கிலோ கறியை பறிமுதல் செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த சக்திவேல், 35, என்பவரையும் பிடித்தனர். 4 பேருக்கும், 4.30 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி நேற்று உத்தரவிட்டார்.