ADDED : ஜூன் 10, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி போலீசார், அதே பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, புகையிலை பொருட்கள், 40,000 ரூபாய் மதிப்பில், மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. விசாரணையில் வேனை ஓட்டிவந்தவர், தலைவாசல், வரகூரை சேர்ந்த சிவபாலன், 35, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.