/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி
/
போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி
ADDED : ஜூலை 28, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் எஸ்.பி., அருண்கபிலன் உத்தரவுப்படி, போலீஸ் அதிகாரி-களுக்கு துப்பாக்கி சுடுவதற்கான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் அந்தந்த சப் - டிவிஷன்களில் பயிற்சி வழங்கப்பட்டது. நேற்று குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு பிரிவில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி நடந்தது. ஆயுதப்படை டி.எஸ்.பி., சரவணகுமார் தலைமை வகித்து பயிற்சி அளித்தார். சைபர் கிரைம், மாவட்ட குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பி-ரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் பயிற்சி பெற்றனர்.