sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சட்டவிரோத மது விற்றால் நடவடிக்கை சோமம்பட்டி ஊராட்சி எச்சரிக்கை

/

சட்டவிரோத மது விற்றால் நடவடிக்கை சோமம்பட்டி ஊராட்சி எச்சரிக்கை

சட்டவிரோத மது விற்றால் நடவடிக்கை சோமம்பட்டி ஊராட்சி எச்சரிக்கை

சட்டவிரோத மது விற்றால் நடவடிக்கை சோமம்பட்டி ஊராட்சி எச்சரிக்கை


ADDED : ஆக 06, 2024 02:49 AM

Google News

ADDED : ஆக 06, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:சோமம்பட்டியில் சட்டவிரோதமாக மது, புகையிலை பொருட்கள் விற்க தடை விதித்து, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த பாலசுப்ரமணியன் உள்ளார்.

ஊராட்சி நிர்வாகம் சார்பில், பணியாளர் ஒருவர், ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலம் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

'தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சந்துக்கடைகள் மூலம் சட்டவிரோத மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

இதில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறி செயல்பட்டால், ஊராட்சி சார்பில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஊராட்சி பகுதி முழுதும் இந்த எச்சரிக்கை ஆட்டோ வலம் வந்தது.

இதுகுறித்து ஊராட்சிச் செயலர் மகேஸ்வரன் கூறியதாவது:

இரு வாரங்களுக்கு முன்பு, வாழப்பாடி டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஊராட்சி தலைவர்களுக்கு கூட்டம் நடந்தது. அதில் சட்டவிரோத குட்கா, மது விற்றால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 25ல், வாழப்பாடி, சோமம்பட்டி, குறிச்சி பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இதனால் சோமம்பட்டி ஊராட்சி மக்கள் நலன் கருதி, சட்டவிரோத குட்கா, மது விற்பனையை தடுக்க விழிப்புணர்வு செய்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us