/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சொத்து பிரச்னையில் தந்தையை கொலை செய்த மகன் கைது
/
சொத்து பிரச்னையில் தந்தையை கொலை செய்த மகன் கைது
ADDED : ஜூன் 25, 2024 02:01 AM
தலைவாசல்: சொத்து பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், மகனுடன் சேர்ந்து மனைவியே, மின்வாரிய ஊழியரை கொலை செய்த வழக்கில், மகனை போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல் அருகே, வரகூர், அம்மன் நகரை சேர்ந்த மின்வாரிய ஒயர்மேன் ஆதிமூலம், 57. இவரது மனைவி வளர்மதி, 47, மகள் பவித்ரா, 28, மகன் கலைச்செல்வன், 19, ஆகியோர் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, மகள் பவித்ரா பெயரில் அதே ஊரில், 50 சென்ட் நிலம் வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஆதிமூலத்துடன், மனைவி, மகன் தகராறு செய்துள்ளனர். நேற்று முன்தினம், ஒருவரையொருவர் வாக்குவாதம் செய்து, தாக்கிக் கொண்டனர்.
ஆத்திரமடைந்த மனைவி, மகன் ஆகியோர், ஆதிமூலத்தை இரும்பு கம்பியால் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசார், வளர்மதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
காயமடைந்த மனைவி, மகனும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். இதில் கலைச்செல்வனை, நேற்று போலீசார் கைது செய்தனர்.