/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் காயமடைந்த ஏட்டு மகன் சாவு
/
விபத்தில் காயமடைந்த ஏட்டு மகன் சாவு
ADDED : ஜூன் 16, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், ஜாகீர்அம்மா பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளையன், ஆத்துார் டவுன் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார்.
இவரது மகன் மகேஷ் அரவிந்த், 25. இவர் கடந்த, 2ல் நகரமலை அடிவாரம், விநாயகர் கோவில் தெரு அருகே, 'ஹீரோ' பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில் மகேஷ் அரவிந்த் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.