/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கை விற்க முயற்சி எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
பைக்கை விற்க முயற்சி எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 28, 2024 03:39 AM
சேலம்: சேலம் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சூரமங்கலத்தில் செயல்படுகிறது.
அதன் வளாகத்தில், விபத்தில் சிக்கிய வாக-னங்கள் நிறுத்தப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் அங்கு நிறுத்-தப்பட்டிருந்த இரு பைக்குளை, ஒரு டிரைவர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். அவரிடம், சூரமங்கலம் போலீசார் விசா-ரித்தபோது, எஸ்.எஸ்.ஐ., சரஸ்வதி, ஏற்றச்சொன்னதாக தெரி-வித்தார். தொடர்ந்து விசாரித்ததில், சரஸ்வதி ஏற்றச்சொன்னதும், அவர் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர கமிஷனர் நடவடிக்கை எடுத்தி-ருந்தார். இந்நிலையில் அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தர-விட்டார்.