/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.30 லட்சம் மோசடியில் வாலிபர் கைது
/
ரூ.30 லட்சம் மோசடியில் வாலிபர் கைது
ADDED : செப் 05, 2024 03:05 AM
காரிப்பட்டி: சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் மாலா, 40. அவரது தம்பி அண்ணாமலை, 38. மின்னாம்பள்ளியில் பேக்கரி நடத்துகின்றனர். அங்கு, வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 41, அவரது தந்தை ராஜா, 62, அடிக்கடி செல்ல அண்ணாமலையுடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின் மாட்டு தீவனம் உற்பத்தி நிறுவனம் நடத்துவதாகவும், அதில் பங்குதாரராக இணைத்து கொள்வதாகவும் தெரிவித்து கடந்த ஜன., 5ல் அண்ணாமலையிடம், 30 லட்சம் ரூபாய் பெற்றனர். ஆனால் பங்குதாரராக இணைத்துக்கொள்ளாமல், பணத்தையும் தராமல் மோசடி செய்ததாக, மாலா, காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார், தந்தை, மகன் மீது வழக்கு பதிந்த நிலையில், நேற்று, மணிகண்டனை கைது செய்தனர்.