sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு

/

சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு

சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு

சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஒரே நாளில் 3,616 வழக்குகள் தீர்வு


ADDED : ஜூன் 09, 2024 04:13 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,616 வழக்குகள் தீர்வு காணப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம், சேலம், சங்ககிரி, ஆத்துார், மேட்டூர், ஓமலுார், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி உள்ளிட்ட நீதிமன்றங்களில், 17 அமர்வுகளில் நடந்தது. இதில், 4,541 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், சேலம் பள்ளப்பட்டி, மேம்பாலம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு, 47, திருமணமாகி நான்கு மகன்கள் உள்ளனர்.

லாரி டிரைவரான இவர் கடந்த, 2021, ஜூன் 25ல், பெங்களூரு அருகில் உள்ள

சித்ரதுர்கா பகுதியில், சாலையை கடக்கும் போது, கார் மோதி உயிரிழந்தார். இவ்வழக்கில் இழப்பீடாக நேற்று, 20 லட்ச ரூபாய்க்கான காசோலையை, மாவட்ட நீதிபதி சுமதி, அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.

அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பெரியசாமி, 55, இவர் கடந்த 2023, நவ.,13 ல் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு, 14 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக நேற்று வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் மொத்தம், 3,616 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 30 கோடியே, 18 லட்சத்து, 56 ஆயிரத்து, 570 ரூபாய் தீர்வுத்தொகையாக வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us