ADDED : ஜூலை 28, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி, மாரியம்மன் புதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி, 50. இவரது கூரை வீடு நேற்று காலை, 10:00 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. உடனே மக்கள், பெரியசாமி உள்-ளிட்ட குடும்பத்தினரை வெளியே மீட்டனர்.
தகவல் கிடைத்து வாழப்பாடி தீயணைப்பு துறையினர் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் இருந்த பணம், நகை, ஆவணங்கள் கருகிவிட்-டன. இதுகுறித்து வருவாய்த்துறையினர், வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.