sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு அதிகாரி வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

/

அரசு அதிகாரி வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

அரசு அதிகாரி வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

அரசு அதிகாரி வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு


ADDED : ஆக 09, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், மாசிநாயக்கன்பட்டி, நத்தக்காட்டைச் சேர்ந்தவர் கோகுல்ராஜன், 27. புழுதிக்குட்டை அணையில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிகிறார். ஒன்பது மாதங்களுக்கு முன், மனைவியுடன் இங்கு வாடகைக்கு குடி வந்தார்.

கடந்த, 6ல் மேச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, மனைவியுடன் சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி, கோகுல்ராஜன் வந்து பார்த்தார்.

அப்போது, பீரோவில் இருந்த, 12 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. அவரது புகாரின்படி அம்மாப்பேட்டை போலீசார், மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் வாயிலாக சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அரசு அதிகாரி வீட்டில், ரூபாய் 12 லட்சம் இருந்தது எப்படி எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us