sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நெரிசலை சீரமைத்த சுற்றுலா பயணி

/

நெரிசலை சீரமைத்த சுற்றுலா பயணி

நெரிசலை சீரமைத்த சுற்றுலா பயணி

நெரிசலை சீரமைத்த சுற்றுலா பயணி


ADDED : ஜூன் 02, 2024 07:29 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு : ஏற்காட்டில் மலர் கண்காட்சி முடிந்த நிலையில், தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கார்கள், சுற்றுலா வேன்கள், இருசக்கர வாகனங்கள் வருகின்றனர்.

இதனால் ஒண்டிக்கடை ரவுண்டானா, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், படகு இல்ல சாலைகள், மலைப்பாதை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணியரின் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

கோடை விழா, மலர் கண்காட்சியின்போது, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டிருந்தனர். இரு நாட்களுக்கு முன் மலர் கண்காட்சி முடிந்த நிலையில், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் திரும்பி சென்றுவிட்டனர். இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.

மதியம் ஒண்டிக்கடை ரவுண்டானாவில்

ஏற்பட்ட நெரிசலை, திருவண்ணாமலையை சேர்ந்த சுற்றுலா பயணி பாலச்சந்தர், 1:30 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டார்.






      Dinamalar
      Follow us