/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பொறியாளர் வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு
/
அரசு பொறியாளர் வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு
ADDED : ஆக 09, 2024 03:48 AM
சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டி, நத்தக்காட்டை சேர்ந்தவர் கோகுல்-ராஜன், 27.
புழுதிக்குட்டை அணையில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிகிறார். 9 மாதங்களுக்கு முன், மனைவியுடன் இங்கு வாடகைக்கு குடி வந்தார். கடந்த, 6ல் மேச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்-பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் தகவல்படி, கோகுல்ராஜன் வந்து பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த, 12 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி அம்மாபேட்டை போலீசார், மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தினர். அப்பகு-தியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.