/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு
/
வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு
வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு
வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு
ADDED : ஆக 03, 2024 01:22 AM
ஓமலுார்,ஓமலுார் அருகே தாராபும், செங்கன்காட்டுவளவை சேர்ந்தவர் அறிவழகன், 47. ஆந்திராவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது வீட்டில் இருந்து பணியை மேற்கொள்கிறார். இவரது மனைவி ராதா, 43. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு, அறிவழகன், வீட்டில் கீழ் அறையில் துாங்கிக்கொண்டிருந்தார். மாடியில் ராதா, இரு மகன்களுடன் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது இரு மர்ம நபர்கள் இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். ராதா எழுந்த நிலையில், அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த, 6 பவுன் தாலிக்கொடியை பறித்து, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டம் வழியே தப்பினர்.
இதுகுறித்து அறிவழகன் நேற்று அளித்த புகார்படி, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.