sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டியலின சிறுவனை தாக்கிய இரு பெண்களிடம் விசாரணை

/

பட்டியலின சிறுவனை தாக்கிய இரு பெண்களிடம் விசாரணை

பட்டியலின சிறுவனை தாக்கிய இரு பெண்களிடம் விசாரணை

பட்டியலின சிறுவனை தாக்கிய இரு பெண்களிடம் விசாரணை


ADDED : மார் 07, 2025 01:28 AM

Google News

ADDED : மார் 07, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனை தாக்கிய பெண்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த, 11 வயது சிறுவன், அங்குள்ள அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் மதியம், பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில், இரு பெண்கள் தாக்கியதாக, அச்சிறுவன் ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனின் தந்தை கூறியதாவது:

நாங்கள் பட்டியலின மக்கள். மகன் பள்ளியில் இருந்து, குடியானவர் வசிக்கும் தெரு வழியே வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள், மகனை தாக்கியுள்ளனர். சட்டை, பேன்ட் கிழிந்தது. அச்சமடைந்த மகனுக்கு, தற்போது வரை காய்ச்சல் உள்ளது.

இதுபோன்று அவன் பலமுறை அடிவாங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். தீவட்டிப்பட்டி போலீசார் வாக்குமூலம் வாங்கினர். அடிக்கடி இச்சம்பவம் நடக்கிறது. அடித்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என, மகனை மிரட்டி உள்ளனர். அங்கு வாழவே அச்சமாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் உமாசங்கரிடம் கேட்டபோது, ''விசாரணை நடக்கிறது. வழக்கு ஏதும் பதியவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us