/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று ஆடி அமாவாசை தேவிக்கு வரமிளகாய் யாகம்
/
இன்று ஆடி அமாவாசை தேவிக்கு வரமிளகாய் யாகம்
ADDED : ஆக 04, 2024 03:49 AM
வீரபாண்டி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சேலம், மன்னார்
பாளையம் பிரிவு அருகே உள்ள பிரத்யங்கிராதேவி கோவிலில் இன்று காலை, 11:00 மணிக்கு வரமிளகாய் யாகம் நடக்கிறது. உலக நன்மை வேண்டி, 500 கிலோ மிளகாய்களை யாக குண்-டத்தில் சமர்ப்பித்து, எதிரிகள் தொல்லை நீங்கவும், 'கண் திருஷ்டி' விலகவும் வேண்டி, 'சத்ரு சம்ஹார' யாகம் நடக்கி-றது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜித்த கலசத்தில் உள்ள புனி-தநீரால் தேவிக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, சர்வ அலங்காரத்-துடன் பூஜை செய்யப்படுகிறது.
அதனால் யாகத்தில் சமர்ப்பிக்க தேவையான வரமிளகாய், நெய் உள்ளிட்ட பூஜை பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்-கலாம் என, கோவில்
நிர்வாகிகள், உற்சவ கட்டளை தாரர்கள் கேட்டுக்கொண்டனர்.